Tuesday, 5 January 2016

முல்லா வழங்கிய தீர்ப்பு

முல்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.
ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் முல்லாவிடம் வந்து நீதிபதி அவர்களே, நான் இந்த ஊருக்குப் புதிது.
நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்களுள் ஒருவன் என்மீது பாய்ந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை, சட்டை ஆகிய எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போய்விட்டான். தயவுசெய்து கண்டுபிடித்து என் உடைமைகளை மீட்டுத் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
நீர் சொல்வதைப் பார்த்தால் இது எங்கள் ஊர் திருடன் கை வரிசையாக எனக்குப்படவில்லை. இது வெளியூர்த் திருடனின் வேலை தான் என்றார்.
இவ்வளவு தெளிவாக எவ்வாறு கூறுகிறீர்கள் ஐயா! என்று வெளியூர்க்காரன் வியப்புடன் கேட்டான்.

எங்கள் ஊர்த்திருடனாக இருந்தால் உமது இடுப்புத் துணியைக்கூட விட்டிருக்க மாட்டான். கௌபீனதாரியாக விட்டு விட்டு இடுப்புத் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போயிருப்பான் என்று முல்லா கூறினார்.

No comments:

Post a Comment